Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

மோகனசாமி
-5 %
கன்னட இலக்கித்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான வசுதேந்த்ராவின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தனித்துவமானது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஒருவனின் கதைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு புனைவுலகில் பேசாப்பொருளைத் துணிந்து பேசுகிறது. தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி மோகனசாமி என்னும் கதாபா..
₹280 ₹295
மோகப் பெருமயக்கு
-5 %
தி.ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது. நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி.ஜானகிராமன் நூற்றாண..
₹152 ₹160
மௌனப் பனி ரகசியப் பனி
-5 %
1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல். மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்தப் பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்று..
₹190 ₹200
மௌனி படைப்புகள்
-5 %
மெளனி படைப்புகள்தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌளியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரு..
₹356 ₹375
மௌனி வெ.சாமிநாத சர்மா என்.எஸ்.கிருஷ்ணன் நினைவோடை
-5 %
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமாமும் பயனும் ஆகும்.இந்நூலில் எழுத்தாளர் மௌனி , சிந்தனையாளர் வெ.சாமிநாத சர்மா , திரைகலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொள்கிறார்...
₹95 ₹100
யயாதி
-5 %
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
யாக்கை
-5 %
குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் ..
₹371 ₹390
யாக்கையின் நீலம்
-5 %
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு வாழ்க்கை அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மேலும் செறிவாக்க முற்படும் எழுத்து முயற்சி. சொல்லின்மூலம் குறிப்பிட்ட அனுபவத்தை, வாதத்தை, தர்க்கத்தை, நியாயத்தை, உணர்ச்சியை, எண்ணக்குமுறலை, கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்படிக் கொண்டுவருவது அவசியம். சொற்களு..
₹105 ₹110
யாத்திரை
-5 %
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்ன..
₹181 ₹190
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
-5 %
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
யாரும் வராதபோது
-4 %
கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்...
₹86 ₹90
யாரோ ஒருவனுக்காக
-5 %
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள். உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உ..
₹57 ₹60
Showing 1141 to 1152 of 1274 (107 Pages)